நான் படித்த புத்தகங்கள்

Published by

on

விருந்தினராக நாம் அமெரிக்கா சென்றால், முக்கியமான ஒரு பிரச்சினை, எப்படி பொழுதுபோக்குவது என்பது. குழந்தைகள் அலுவலகமோ, படிக்கவோ சென்று விடுவார்கள். வீட்டில் இருக்கும் மகனோ, மருமகளோ அவர்களுக்கென்று ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமயத்தில் நமக்கு உதவியாக இருப்பது, சன்-டிவி , கம்ப்யூட்டர் போன்றவைதான். கொஞ்சம் ஆங்கிலம் பழக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பேப்பர் படிக்கலாம். கதைகள் , செய்திகள் படிக்கலாம். இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது, எனது படிக்கும் பழக்கமே.  பிறரின் வாழ்க்கை வரலாறு, நாட்டின் கதை, உலக விஷயங்கள் இப்படித்தான் எனக்குப் படிக்க பிடிக்கும். இருப்பினும், ஏற்கனவே  என் மகன் வாங்கிவைத்திருந்த , எனக்காக ஹூஸ்டன் மீனாட்சியம்மன் புத்தகக் கடையில் வாங்கிய புத்தகங்களை படித்தேன். நான் அப்படி படித்த புத்தகங்களை, அவைகளை எழுதிய  ஆசிரியர்கள் வரிசையில் வகைப்படுத்தியிருக்கிறேன்.

சுஜாதா

  – எப்போதும் பெண்

  – நிலா நிழல்

  – கற்றதும் பெற்றதும்

  – ஆ..!

  – ஓரிரு எண்ணங்கள்

  – புறநானுறு ஒர் எளிய அறிமுகம் (முதல் தொகுதி)

  – ஐந்தாவது அத்தியாயம்

  – ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

  – ஒரு நடுப்பகல் மரணம்

  – ஜீனோம்

 – வசந்தகால குற்றங்கள்

 – நூற்றாண்டின் இறுதியில் சில சாதனைகள்

 – அனுமதி

 – பதினாலு நாட்கள்

 – நில் கவனி தாக்கு

 – விவாதங்கள் விமர்சனங்கள்

 – தலைமைச் செயலகம்

 – கறுப்புக் குதிரை

ஜானகிராமன் :

  – மோகமுள்

  – அடுத்த வீடு ஐம்பது மைல்

  – பிடி கருணை

  – அமிர்தம்

மதன் :

  – வந்தார்கள் வென்றார்கள்

கதிரவன் எழில் மன்னன் :

  – ஓர் அமெரிக்கர் தமிழரின் பார்வையில்

பாரதியார்

  – படிக்கவேண்டிய பாரதியார் கதைகள்

சிவலிங்கம் /APJ அப்துல்கலாம்

  – அக்னிச்சிறகுகள்

நீல பத்மநாபன்

  – நீல பத்மநாபன் கதைகள் (4)

தென்கச்சி கோ சுவாமிநாதன்

  – இன்று ஒரு தகவல் (பாகம் – 21)

சு. சமுத்திரம்

  – சு சமுத்திரம் கதைகள்

மு. மேத்தா

  – மகுட நிலா

கண்ணதாசன் :

   – கடைசிப்பக்கம்

   – அர்த்தமுள்ள இந்துமதம்

டாக்டர் சி எஸ் எஸ் சோமசுந்தரம்

  – உலக மகா ஞானிகள்

சி. சு. செல்லப்பா

  – எழுத்து

புதுமைப்பித்தன்

  – மொழிபெயர்த்த உலகச் சிறு கதைகள்

பிரபஞ்சன்

   – வானம் வசப்படும்

   – ஒரு சிநேகத்தின் கதை

வாஸந்தி

   – பார்வைகளும் பதிவுகளும்

ஜெயகாந்தன் :

  –  சுந்தரகாண்டம்

இந்திரா சௌந்தரராஜன்

  – காற்று.. காற்று .. உயிர்

(என் தந்தையின் 2007 அமெரிக்கப் பயணம் சமயம், அவரது பார்வையில்  எழுதி வைத்திருந்தது – ஆஸ்டின் சௌந்தர்).

Leave a comment