Category: வாசிப்பு

  • இத்தாலியில் மதாரின் மாயப்பாறை

    இத்தாலியில் மதாரின் மாயப்பாறை

    நான் குடும்ப சகிதமாக இத்தாலிக்குச் செல்கிறேன் என்று சொன்னதும், ஒருவர் விடாமல் சொன்னது, புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான். ரோம், ஃப்ளோரன்ஸ், வெனிஸ், பைசா என்று எந்த நகரில் சுற்றினாலும், எடுத்த புகைப்படங்கள்  அவ்வளவு அழகாக இருந்தன.  அந்தப் புகைப்படங்களின் அழகுக்கு காரணம் இத்தாலி நகர வீடுகளின் அழகா இல்லை ஐந்து அல்லது ஆறு மாடிக் கட்டிடங்களே உள்ள வீதிகளில் மேல் நோக்கிப் பார்த்தாலே தெரியும் நீல வானமா? எனக்கு…

  • புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்

    புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்

    (மறுபிரசுரம்) எழுத்தாளர் பவா செல்லத்துரை , புத்தகங்கள்  அலமாரியில் சீராக அடுக்கப்படாமல், சமையலறை, படுக்கையறை , வரவேற்பறை என்று அங்கங்கே இறைந்துகிடப்பதுதான் அழகு என்று நிலம் நாவலில் , ‘இழப்பின் வலி’ கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்.  அவர் சொன்னதுபோல், எங்கள் வீட்டில்  சமையலறை, படுக்கையறை மற்றும் வரவேற்பறை என்று இறைந்துகிடக்கும் புத்தகங்களில் ஒன்று அசோகமித்திரனின், ‘புண் உமிழ் குருதி’ எனும் சிறுகதை தொகுப்பு.  அப்படி இருப்பதால்தான் அதில் இருக்கும் இருபத்து ஏழு…

  • நான் படித்த புத்தகங்கள்

    நான் படித்த புத்தகங்கள்

    விருந்தினராக நாம் அமெரிக்கா சென்றால், முக்கியமான ஒரு பிரச்சினை, எப்படி பொழுதுபோக்குவது என்பது. குழந்தைகள் அலுவலகமோ, படிக்கவோ சென்று விடுவார்கள். வீட்டில் இருக்கும் மகனோ, மருமகளோ அவர்களுக்கென்று ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமயத்தில் நமக்கு உதவியாக இருப்பது, சன்-டிவி , கம்ப்யூட்டர் போன்றவைதான். கொஞ்சம் ஆங்கிலம் பழக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பேப்பர் படிக்கலாம். கதைகள் , செய்திகள் படிக்கலாம். இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது, எனது படிக்கும்…

  • பன்னாட்டுக்காரனின் கதைகள்

    பன்னாட்டுக்காரனின் கதைகள்

    12/30/2024-ன்  மாலை, எனக்கு ஒரு இனிதான மாலையாகியது. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸ் குமாரின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது.…

  • சுஜாதாவின் நினைவில் மலரும் கற்றவை

    சுஜாதாவின் நினைவில் மலரும் கற்றவை

    (மறுபிரசுரம்) சில நாட்கள் அப்படி நடந்துவிடும். ஒன்றும் திட்டமிடாமலே ஒவ்வொன்றும் ஒரே மாதிரி சொல்லிவைத்ததுபோல் நடக்கும்.  நவம்பர் 30, 2021 – எனக்கு அப்படித்தான். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னிடம் இருந்த அவர் எழுதிய நூல்களில், தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி – உயிர்மை பதிப்பகம்) எடுத்தேன். தொகுப்பில் இருந்த ஐம்பது கதைகளில் ஒவ்வொன்றாக விரல் வைத்து, ‘ரேணுகா’, ‘நகரம்’, ‘அரிசி’ போன்ற கதைகள் நேற்றுத்தான் வாசித்ததுபோல்…

  • 2024-லும் ராதாவும் சௌந்தரும் வாசித்தார்கள்

    2024-லும் ராதாவும் சௌந்தரும் வாசித்தார்கள்

    2024-ல் மொத்தம் 101 புத்தகங்கள் எங்கள் வீட்டு நூலகத்தை வந்தடைந்துள்ளன. 2023-ல் அவற்றுக்கென நாங்கள் கட்டியமைத்த புத்தக அல்மேராவைக் கண்வைத்திருக்குமென நினைக்கிறோம். டஜன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. 2023-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது வாங்கிய யுவன் சந்திரசேகரை மார்ச் 2024-ல் ராதாவும் நானும் பார்க்கச் சென்றோம். “அன்புடன் யுவன்” என்று அவர் கையெழுத்திட்ட இரு புத்தகங்கள் (சரி செய்யமுடியாத சிறு தவறுகள், வேதாளம் சொன்ன கதை). அதே மார்ச்சில்,…

  • தமிழ் சினிமா விமர்சனம் – கசக்கும் உண்மை

    தமிழ் சினிமா விமர்சனம் – கசக்கும் உண்மை

    வாசிப்பனுபவம் எழுதுவதற்கு என, தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்கள் க.நா.சுப்ரமண்யம், அசோகமித்திரன், சி.சு. செல்லப்பா, ஜெயமோகன் எழுதியுள்ள புத்தக மதிப்புரைகளை வாசித்து, எழுதி எழுதி சாதனை படைத்தவர்களின் இலக்கிய விமர்சன உரைகளை கேட்டு என கற்றுக்கொள்ளும் முயற்சிகள் பல செய்து இருக்கிறேன். ஆடிக்காற்றுக்கும், அமாவாசைக்கும் மட்டும் சினிமா விமர்சனம் எழுதுபவன் என்றாலும், வாசிப்பனுபவம் எழுத எடுத்த சிறு சிறு முயற்சிகளேனும் சினிமா ரசிகனாக செய்து இருக்க வேண்டும். சினிமா விமர்சனம் பற்றிய…