Category: வாசிப்பு
-

யாதுமாகி
தமிழில் தலைசிறந்த வாசகர்களில் ஒருவரான, கோவை விஜயா பதிப்பகம் பதிப்பாளர், விஜயா வேலாயுதம் முன்னெடுப்பில் கொடுக்கப்படும் ‘கி.ரா. விருது ’-விற்கு, தனியார் இலக்கிய அமைப்புகளால் தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்படும் விருதுகளில் தலைமையான இடம் உண்டு . 2022-ஆம் வருடத்திற்கான, கி.ரா. விருது , எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களில் ஒருவர், தமிழுக்கு செய்கிற சேவையை பாராட்டும் பொருட்டும், அவர் தலைசிறந்த படைப்பாளியாக இருப்பதை குறித்தும் இந்த…
-

ப்ளம் கேக் – திகட்டாத இனிப்பு
விருந்திற்குச் சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமோ, கேக்கோ கொடுத்து மேலும் உபசரிப்பை இனிமையாக்குவார்கள். கனடா தோழி இந்துமதி, அவர் வீட்டு விருந்து முடிந்து எங்களுக்குப் பரிமாறியது, ஆனந்த் குமார் கவி மனதுடன் படைத்துக் கொடுத்த ‘ப்ளம் கேக்’. இந்தப் பிரபஞ்சத்தின் மீது இருக்கின்ற பிரியத்தையெல்லாம் பிரயோகித்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் துளித் துளியெண உண் எனச் சொல்லும் கவிஞனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த நாள்தான் உன்…
-

அழகியை அறிய மூன்று நூல்கள்
சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள், வெள்ளைக்குடி நாகனார், கோவார் கிழார் முதல், ராஜ ராஜ சோழனின் கதையை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காட்சி வடிவமாக்கிய மணி ரத்னத்தின் படத்திற்கு பாட்டு எழுதிய கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வரை அவளைப் பற்றிப் பாடுவதும் எழுதுவதும் தொடர்கிறது. அவள் சரித்திரத்தைப் பாடுவது என்பது தமிழர்களின் வரலாற்றைப் பாடுவது. அவளின் கதையை எழுதினால், அது தமிழர்களின்…
-

நானெனும் நீயும் நீயெனும் நானும்
கமலதேவியின் சீதா, துறையூரில் இறங்கி , பனிக்காலம் முடித்த புதுவெயிலில் கொடுத்த எரிச்சலில் கைக்குட்டையையெடுத்து முகத்தைத் துடைக்க, கதையின் உள்சென்றுவிட்ட வாசகன் சௌந்தர் உளப்பூர்வமாக சீதாவைத் தொடர, யாரோ தன் முன்னர் நிற்பதுபோல் மாயையெனத் தோன்ற நிமிர்ந்து பார்த்தார். கடுகைப்போட்டால் வெடிக்கும் என்ற முகத்துடன் கொதி நிலையில், மேலாளர் சௌந்தர் நின்றார். வா. சௌந்தர் : என்னங்க சார் ? மே. சௌந்தர் : எத்தனை நாளைக்குத்தான் கமலதேவி கதைகளையே…
-

வாழ்வெனும் நெய்யில் புரட்டிய வண்டல்
“ஏம்மா, இப்பல்லாம், நெய் காய்ச்சுனா முருங்கை இலையே போடறதில்ல” என்றேன் ராதாவிடம். “இந்தக் கோபி முருங்கைக் கீரை கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தார், எப்ப பார்த்தாலும் முருங்கை முருங்கைனு பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு. ஒண்ணு பண்ணுங்க, உங்க தங்கச்சி சித்ராவ டிக்கட் போட்டுக் கூட்டிக்கிட்டு வாங்க. தம்பி கோபிய வாரா வாரம் முருங்கைக் கீரை, காய்னு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. அவங்களாச்சு, நீங்களாச்சு. நானே சமைச்சு சாப்பிட்டு எனக்கும் நாக்குச்…
-

புனைவின் நடை வாசிப்பிற்கு ஒரு தடையா?
அசோகமித்திரனால் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ‘மலை மேல் நெருப்பு’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். அசோகமித்திரனின் பெயர் இருந்ததால் மட்டுமே முழு நாவலையும் வாசித்தேன். வாசிப்பின் பெரும் தடையாக இருந்தது நடை. மென்மையான மொழியில் கதை நெய்யும் அசோகமித்திரனின் நடையை நாவலில் காணோம். காதருகே வந்து கிசுகிசுப்பாக கதை சொல்லும் அவர் குரலை இனம் காண முடியவில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் நூல்களுக்கே உள்ள ஒரு பொதுவான…
-

சமகாலப் பிரச்சனையை விவாதிக்கும் ஓர் ஆய்வு நூல்
நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் பாவக்கதைகள் படத்தைப் பார்த்துவிட்டு, இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா, இதைப் போன்ற ஆணவக்கொலைகள் இன்றும் நடக்கின்றனவா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே சினிமாப் பார்க்கும் வசதி உள்ள இந்த நாளில், என்றாவது ஒரு நாள் செய்தியாக வரும் விஷயங்களை, என்னமோ அன்றாடும் நடக்கும் விஷயம்போல் படம் எடுத்திருப்பது, தவறான செய்தியைப் பரப்பவது போல் ஆகிறது என்று எழுதப்படும் விமர்சனங்கள். இவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக, சினிமாவை அரசியல்…
-

வாசிப்பு வைத்தியன்
முதல் நாள் அந்த நிறுவனத்திலிருந்து நிதிப்பற்றாக்குறையால் வெளியில் அனுப்பப்பட்ட ஏழாயிரம் அலுவலர்களில் அவரும் ஒருவராக இருக்கலாம். மறு நாள் காலையில் அவர் பார்க்கும் தொலைக்காட்சியில் இருபது வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் டாலர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது உங்கள் கையில் நூறாயிரம் டாலர்கள் இருக்கும் என்று தொலைக்காட்சியில் ஒருவர், மேலே மேலே செல்லும் நிறுவனத்தின் பங்குகளின் விலையை படம் போட்டுக் காட்டினால் எப்படி இருக்கும் ? நடப்பதே அவரது…
-

கொட்டுக்காளி – யாவரும் பார்க்கலாம்
விஜய் ரெங்கராஜன் எழுதிய வெறியாட்டுக் கதையில், கதை சொல்லி ஷண்முகம், தமிழாசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப்படி சொல்கிறான். //வேலன் வெறியாட்டு சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சடங்கு முறை. தன் பெண் மெலிந்துகொண்டிருக்கிறாள் எனக் கண்டு, யாரோ ஒருவன் மீது காதல்கொண்டிருக்கலாம் என்று எண்ணி, அத்தலைவனின் நினைவை அவளிடமிருந்து அகற்றுவதற்காக செய்யும் சடங்காகும். // செயற்கை நுண்ணறிவு வந்து தன் வேலையே பறிபோகும் என பதறிக்கொண்டிருக்கும் ஒருவன், இந்த சங்ககாலச்…
-

நட்சத்திர வாசகர்
ஜெயமோகனுக்காக, தனது கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்று சொன்ன ரீடர் செந்திலை நண்பர்களுக்குத் தெரியும். இந்த வருடம் ஜனவரியில் பொங்கல் சமயத்தில் ஒரு நாள், அவரை அழைத்திருந்தேன். “சார், ஆசான் அப்பப்ப சென்னைக்கு வருவாரு. நான் போய் பார்த்திட்டு வருவேன். நீங்க போன அக்டோபரில், அவரை கொண்டுபோய் அமெரிக்காவில வைச்சுக்கிட்டீங்க. நான் , நாகர்கோவில் போய் அவர் வீட்டு வாசப்படில பத்து நிமிஷம் உட்கார்ந்திருந்தேன்.” என்றார். வெண்முரசை , முழுக்க முடித்த…