-

கதை சொல்லும் ஓவியங்கள்
வாடிகன் அருங்காட்சியகத்தில், ஓவியங்களை பார்த்து அதிசயத்திருந்த நாங்கள், மைக்கேல் அஞ்செலோ வாழ்ந்த ஊரான ஃப்ளொரன்ஸில் அவர் வடிவமைத்த சிலையை பார்க்க முடியாமல் போன ஏமாற்றம், எல்லாம் சேர்ந்து வெனிஸில் ஒரு அருங்காட்சியகத்தையாவது முழுக்கு முழுக்க நிதானமாக பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். வெனிஸ் சென்றும் சேராததுமாக, Gallerie Academia-விற்கு முன்பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்தோம். இணையத்தில் பதிவு செய்வதில் இருந்த இன்னல்களை கடக்கமுடியாத நிலையில் , நாங்கள் தங்கியிருந்த விடுதியினரை…
-

வாடிகன் அருங்காட்சியகத்தில் சிங்கமுக அன்னை
ரோம் நகரமென்றால், “You too, Brutus” என்று பிரபலமான வசனத்தின் மூலமாக தெரிந்திருந்த ஜூலியஸ் சீசரையும், அவரைக் கொன்ற நண்பர்களையும், சீசரின் காதலியான கிளியோபாட்ராவையும், எகிப்து இத்தாலிக்கான வரலாற்றையும் மேலும் அறிந்துகொள்ள கிளியோ பாட்ரா, ஜூலியஸ் சீசர் வரலாற்றைச் சொல்லும் படங்களை ஆவணங்களை பயணத்தின் முன் தயாரிப்பாகப் பார்த்தோம். மைக்கேல் அஞ்செலோவின் கலைப் படைப்புகளையும் அங்கு பார்க்கவிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தும், முன்கூட்டியே அனுமதிச் சீட்டை வாங்காததால், Florence-ல் அவரது ஆகச்சிறந்த…
-

பசிக்கும்லே
ராதாவிற்கு ஒரே கவலை. கோழிக்கறிகூட சாப்பிடாத விரதத்தில் இருக்கும் நாம் இத்தாலி பயணத்தில் பத்து நாட்கள் வெறும் மரக்கறி உணவாக சாப்பிட்டு எப்படி சமாளிப்பது என. பிஸ்ஸா அவருக்குப் பிடித்த உணவெனினும், பத்து நாட்களுக்கு மனுஷன் அதை மட்டும் சாப்பிட்டிக்கிட்டிருந்தா நாக்கு செத்துப்போகாதா என்ற கவலை. சஹா , “பிஸ்ஸா இங்கு சாப்பிடுவதுபோல இருக்காது. அங்கு வேறு மாதிரி சுவையாக இருக்கும். இங்கு கொத்து பராட்டோ சாப்பிடுவதற்கும், தமிழ்நாட்டில் கொத்து…
-

நட்சத்திர வாசகர்
ஜெயமோகனுக்காக, தனது கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்று சொன்ன ரீடர் செந்திலை நண்பர்களுக்குத் தெரியும். இந்த வருடம் ஜனவரியில் பொங்கல் சமயத்தில் ஒரு நாள், அவரை அழைத்திருந்தேன். “சார், ஆசான் அப்பப்ப சென்னைக்கு வருவாரு. நான் போய் பார்த்திட்டு வருவேன். நீங்க போன அக்டோபரில், அவரை கொண்டுபோய் அமெரிக்காவில வைச்சுக்கிட்டீங்க. நான் , நாகர்கோவில் போய் அவர் வீட்டு வாசப்படில பத்து நிமிஷம் உட்கார்ந்திருந்தேன்.” என்றார். வெண்முரசை , முழுக்க முடித்த…
-

நம்மவர் உழைப்பாளிகள்
அயல் நாட்டில் நடக்கும் சமயம், நம்மைப் போன்றவர்களை, நாம் அறியாமலேயே நம் கண்கள் தேடும். கால்களை அகற்றி வைத்து நின்றிருந்தாலும் சரி , ஒட்டி வைத்து நின்றிருந்தாலும் சரி நம்மவர் என்று அடையாளம் காண அவ்வளவு நேரம் பிடிக்காது. எதிர் கொண்டு நடந்தால், அவர் முறைக்கும் முறைப்பில் நம்மவர் என இனம் கண்டுவிடமுடியும். இதில் அத்தி பூத்தாற்போல் சிரிப்பவர்களும் உண்டு. எனது அண்மைப் பயணமான இத்தாலி நகரங்களில், நான் கண்ட…
-

இத்தாலியில் மதாரின் மாயப்பாறை
நான் குடும்ப சகிதமாக இத்தாலிக்குச் செல்கிறேன் என்று சொன்னதும், ஒருவர் விடாமல் சொன்னது, புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான். ரோம், ஃப்ளோரன்ஸ், வெனிஸ், பைசா என்று எந்த நகரில் சுற்றினாலும், எடுத்த புகைப்படங்கள் அவ்வளவு அழகாக இருந்தன. அந்தப் புகைப்படங்களின் அழகுக்கு காரணம் இத்தாலி நகர வீடுகளின் அழகா இல்லை ஐந்து அல்லது ஆறு மாடிக் கட்டிடங்களே உள்ள வீதிகளில் மேல் நோக்கிப் பார்த்தாலே தெரியும் நீல வானமா? எனக்கு…
-

எண்களின் உலகம் – அதிபெரும் பந்தயம்
(மறு பிரசுரம்) எனக்கு அப்படி ஒரு பழக்கம். யாருடனாவது போனில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , ஜன்னலில் இருக்கும் பிளைண்ட்ஸை திறப்பதும் மூடுவதுமாக இருப்பேன். அந்தச் செயல் எப்படி என்னை ஒற்றிக் கொண்டது என்று தெரியவில்லை. ஒரு வேளை பேசும் விஷயம் ஆர்வம் உள்ளதாக இருந்தால் அப்படிச் செய்வேனாக இருக்கும். அப்படித்தான் 2006 செப்டம்பர் மாதத்தின் ஒரு மதிய வேளையில், புதிததாக வீடு வாங்கிய நண்பர் ஒருவர், போனில் அவர் தனது புதிய…
-

ஆறு வார்த்தைகளில் கதைகள் (எண்ணங்கள்)
(மறுபிரசுரம்) ஏர்னெஷ்ட் ஹெமிங்க்வே, கற்றுக்கொடுத்த வழியில், சில வருடங்களுக்கு முன்னர், ஆறு வார்த்தைகளில் கதைகள் என்று, எனக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு, தமிழில் எழுதி வந்தேன். அவைகளைக் கதைகள் என்று சொல்லலாமா, வெற்று எண்ணங்கள் என்று வகைப்படத்தலாமா, காலம் கடந்து அவைகள் நிற்குமா, நிற்காதா , இலக்கியமா என்று கேள்விகள் கேட்டால், அதை விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் விட்டுவிடுகிறேன். எனக்கிருந்த ஒரு குழப்பம், இன்றைய வாழ்க்கையை பிற்காலத்தில் வாசிப்பவன் படித்தால், அது அவ்வளவு…
-

புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்
(மறுபிரசுரம்) எழுத்தாளர் பவா செல்லத்துரை , புத்தகங்கள் அலமாரியில் சீராக அடுக்கப்படாமல், சமையலறை, படுக்கையறை , வரவேற்பறை என்று அங்கங்கே இறைந்துகிடப்பதுதான் அழகு என்று நிலம் நாவலில் , ‘இழப்பின் வலி’ கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவர் சொன்னதுபோல், எங்கள் வீட்டில் சமையலறை, படுக்கையறை மற்றும் வரவேற்பறை என்று இறைந்துகிடக்கும் புத்தகங்களில் ஒன்று அசோகமித்திரனின், ‘புண் உமிழ் குருதி’ எனும் சிறுகதை தொகுப்பு. அப்படி இருப்பதால்தான் அதில் இருக்கும் இருபத்து ஏழு…
-

நான் படித்த புத்தகங்கள்
விருந்தினராக நாம் அமெரிக்கா சென்றால், முக்கியமான ஒரு பிரச்சினை, எப்படி பொழுதுபோக்குவது என்பது. குழந்தைகள் அலுவலகமோ, படிக்கவோ சென்று விடுவார்கள். வீட்டில் இருக்கும் மகனோ, மருமகளோ அவர்களுக்கென்று ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமயத்தில் நமக்கு உதவியாக இருப்பது, சன்-டிவி , கம்ப்யூட்டர் போன்றவைதான். கொஞ்சம் ஆங்கிலம் பழக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பேப்பர் படிக்கலாம். கதைகள் , செய்திகள் படிக்கலாம். இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது, எனது படிக்கும்…