Category: இன்ன பிற

  • தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

    தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

    ஒரு மகன் வெளியூர் சென்று சம்பாதிக்கவேண்டும் என தன்  தாயிடம் மன்றாடுகிறான். தாயிற்கோ மகனைப் பிரிய இஷ்டம் இல்லை. சென்றே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகனுக்கு கட்டுச்சாதம் கட்டி அனுப்பி வைக்கும்பொழுது, தாய், “போகும் வழியில் புளியமரத்தின் அடியில் சாப்பிட்டு ஓய்விடு, ஊருக்குத் திரும்பி வரும் வழியில் வேப்பம் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறு” என்கிறாள். அன்னையின் ஆணைப்படி, செல்லும் வழியில் புளியம் மரங்களை கண்டு ஓய்வு எடுக்கிறான்.…

  • பாரதி ராஜா – அஞ்சலி

    பாரதி ராஜா – அஞ்சலி

    நான் முளைத்து மூன்று இலை விடாததற்கு முன்னரே, என்னைவிட வயதில் மூத்த சகோதர்களால் ,  நல்ல படத்திற்குப் பின்னால் இருப்பவர் இயக்குனர் என்பதை கற்றுக்கொண்டேன். திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனிடம் என்ன சிறப்பு, பாலச்சந்திரனின் கதாநாயகி செருப்பைக் கழட்டிக்கொண்டே வசனம் பேசுகிறாள், ஶ்ரீதர் படம்,  என்று வீட்டு முற்றத்தின் நிலா வெளிச்சத்திலும், பள்ளி சென்று வீடு திரும்பும் நடைபாதையிலும்,   பாலபாடம் எடுத்தார்கள்.  பெல்பாட்டம் பேண்ட் போட்ட ஒரே…

  • தன்னை முன்னிறுத்தலும் ஆவணப்படுத்தலும்

    தன்னை முன்னிறுத்தலும் ஆவணப்படுத்தலும்

    தனக்கிருக்கும்  அசையா சொத்து அசையும் சொத்து எனப்பேசி நான் பெரிய ஆளென பெருமை கொள்ளும் தற்பெருமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதிவு இல்லை இது. எழுத்தாளனாக, ஓவியனாக, இசைக்கலைஞனாக, பாடகனாக, அறிவியளாலனாக  தனது துறையில், தனக்கென தனித்துவம் கொண்டு, அயராது உழைக்கும் ஒருவர்,  கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பவருக்கு, தன்னை முன்னிறுத்தலையும் அதை சார்ந்து ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் பதிவு.  அமெரிக்க நிறுவனங்கள், வசந்த காலத்தில், கல்லூரி பல்கலைக்கழகங்களிலிருந்து சில மாணவர்களை…

  • ஊர் நிலவரம் – ஜனவரி 2026

    ஊர் நிலவரம் – ஜனவரி 2026

    கிராமத்து வீட்டில் இருக்கும் நாட்களில் , காலை நடைக்குத் தயாரானால், ‘சாமி, பனி தலையில் இறங்கும்’ என்று அக்கா தடுத்துவிடுவார்கள். மாலை நடை மட்டும்தான். அப்பாவையும், அக்காவையும், குடும்பத்தையும் தெரிந்தவர்கள், எங்களை வழியில் நிறுத்திப் பேசுவார்கள். அப்பாவின் வார்த்தைகளில் உரம் பெற்று வாழ்க்கையை சுமுகமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு எங்களிடம்  சொல்வதற்கு நிறைய இருக்கும்.  வேறு யாரோ என்று எங்களை புரிந்துகொண்டு நலம் விசாரிப்பார்களும் உண்டு. பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகள் யாரென…

  • அரைப்படி சேர்த்துப் போடு

    அரைப்படி சேர்த்துப் போடு

    என் அம்மா பிறந்த ஊரில் , குத்தகைக்கு தோட்டம் பிடித்து அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால், ஊரே எல்லாம் என் தந்தையை மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். அவர் குத்தகைக்கு எடுக்கவிருந்த தோட்டம் ஒன்றில், அதிகம் நடமாட்டமுள்ள பாதையின் அருகில் வீடு  இருந்தது. போவோர் வருவோர் எல்லாம், “மாப்பிள்ளை, நீ அந்தத் தோட்டத்தை குத்தைக்கு எடுத்தைனா, சாப்பாட்டுச் செலவு அதிகமாகும் பாத்துக்கோ” என்றார்கள். மண்ணின் தன்மையையும், நீர் வளத்தையும் மட்டும் பார்த்து ஒரு…

  • சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு

    சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு

    எனக்குப் பெண்களைப் பிடிப்பல்லை. குறிப்பாக, மிகக்குறிப்பாக என் வகுப்பில் படிக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை. பத்து வயதான நான் இப்படிச் சொன்னால், அம்மா, அதற்கு, இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படிச் சொல்கிறாயா என்று பார்க்கலாம் என்று குறுஞ்சிரிப்பு சிரிப்பார்கள். எனக்கு அந்தக் குறுஞ்சிரிப்பின் அர்த்தம் புரிவதில்லை. கதை, என்னைப் பற்றியோ, எனக்குப் பெண்களைப் பிடிக்காததைப் பற்றியோ அல்லது என் அம்மாவின் கிண்டலைப்  பற்றியோ இல்லை. இந்தக் கதை, அங்கிள், ஆண்டி…

  • நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

    நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

    பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகளில், சின்னப்ப தாஸ் (சத்யராஜ்) சுவரில் எழுதியிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வௌவ்வால்கள் தொங்குவது போல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, ஜெனிஃபர் (ரேகா) டீச்சரைக் காதலித்த காலகட்டத்தில், நான் திருச்சி தேசியக் கல்லூரியில், முதுகலை இரண்டாம் வருடம்  படித்துக்கொண்டிருந்தேன்.  கல்லூரியின் வாசலில்,  வலது பக்கத்தில் இருக்கும் கோவிலில் பிள்ளையார் கிழக்குப் பார்த்து அமர்ந்திருப்பார். கல்லூரி வாசலுக்கு நேர் எதிரே இருந்த குடித்தனங்களின் சுற்றுச் சுவரில், கல்லூரியின் சுற்றுச் சுவரில் எனப்…

  • அம்மாவின் நம்பிக்கை

    அம்மாவின் நம்பிக்கை

    (மறு பிரசுரம்) “எல்லம்மாள்தான் எனக்கு எல்லாம். எல்லாம் எனக்கு எல்லம்மாள்தான்” என்று இருப்பவன் நான். எல்லம்மாள் , எனது அம்மாவின் பெயர். இளங்கலை மூன்றாம் வருடம், கடைசித் தேர்வு. அந்தப் பாடத்தை , நான் எள்ளளவும் படித்ததில்லை. மற்ற தேர்வுகளுக்கும் அந்தக் கடைசி தேர்வுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை இருந்தது. அந்த மூன்று நாட்களில் , “எல்லாம் படித்துவிடலாம், என்ன பெரிய? “ என்று இருந்தேன். முதல் இரண்டு நாட்கள்,…

  • புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு

    புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு

    தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருதைப் பெறும் கவிஞர் ரவிசுப்பிரமணியன் கனடா வந்துள்ளார். அவரை நண்பர்கள் சகிதமாக சென்று பார்க்கும் நிமித்தம் முன்னிட்டு ஒரு airbnb வீட்டை பதிவு செய்துவிட்டு, அந்த விலாசத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் “ஏன் சௌந்தர் , நான் செக்க கண்டனா சிவலிங்கத்த கண்டனா வாடான்னா வரப்போறேன்” என்று பதில் அனுப்பியிருந்தார். இதைப்போன்ற சொல்லாடல்கள் புலம்பெயர்ந்த எங்கள் வாழ்வில் இல்லை. ஆங்கிலமும்,…

  • வணக்கம் தலைவி

    வணக்கம் தலைவி

    அம்மா சமைத்துக்கொடுத்த இந்திய உணவை எடுத்துக்கொண்டு சென்று பள்ளியில் சாப்பிடும்பொழுது சக மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாவதும், பெண்ணேன்றால் அடங்கிப்போ என்று ஆதிக்கும் செலுத்தும் அப்பாவும் என வலிகளை சுமந்த வாழ்க்கையை மீட்டெடுத்தது இசையும் பாட்டும்தான் என்று சொல்லும் பாடகி வித்யா வாக்ஸின் பன்மொழி மாஸ் அப் பாடல்களை பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். “We don’t talk anymore” என்ற செலினா கோமஸ் பாடலை வித்யா வாக்ஸும், “பானி டா…