• புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு

    புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு

    தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருதைப் பெறும் கவிஞர் ரவிசுப்பிரமணியன் கனடா வந்துள்ளார். அவரை நண்பர்கள் சகிதமாக சென்று பார்க்கும் நிமித்தம் முன்னிட்டு ஒரு airbnb வீட்டை பதிவு செய்துவிட்டு, அந்த விலாசத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் “ஏன் சௌந்தர் , நான் செக்க கண்டனா சிவலிங்கத்த கண்டனா வாடான்னா வரப்போறேன்” என்று பதில் அனுப்பியிருந்தார். இதைப்போன்ற சொல்லாடல்கள் புலம்பெயர்ந்த எங்கள் வாழ்வில் இல்லை. ஆங்கிலமும்,…

  • சக்தித் திருமகன் – திருப்தி 

    சக்தித் திருமகன் – திருப்தி 

    என்னதான் சினிமா ஆர்வலனாக இருந்தாலும், ஒரு சினிமாவை நான் பார்ப்பதற்குப் பொழுதுபோக்கைத் தாண்டி காரண காரியங்கள் வேண்டியதாக உள்ளது. பொழுதைப் போக்க என்னிடம் ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் உள்ளன. வாசித்து முடிக்கவேண்டிய புத்தகங்கள்  வேறு வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அதென்ன ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் என்று கணக்குக் கேட்டால், அந்த எண்ணை எவ்வளவு பிரியமாகச் சொல்கிறேன் என்று கொஞ்சம் யோசித்தால் போதுமானது. செப்டம்பர் 19, 2025-ல் வெளிவந்த சக்தித் திருமகன்…

  • வணக்கம் தலைவி

    வணக்கம் தலைவி

    அம்மா சமைத்துக்கொடுத்த இந்திய உணவை எடுத்துக்கொண்டு சென்று பள்ளியில் சாப்பிடும்பொழுது சக மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாவதும், பெண்ணேன்றால் அடங்கிப்போ என்று ஆதிக்கும் செலுத்தும் அப்பாவும் என வலிகளை சுமந்த வாழ்க்கையை மீட்டெடுத்தது இசையும் பாட்டும்தான் என்று சொல்லும் பாடகி வித்யா வாக்ஸின் பன்மொழி மாஸ் அப் பாடல்களை பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். “We don’t talk anymore” என்ற செலினா கோமஸ் பாடலை வித்யா வாக்ஸும், “பானி டா…

  • வாழ்க்கைச் சுழல் (மறு பதிவு) 

    வாழ்க்கைச் சுழல் (மறு பதிவு) 

    சுழல் – 1: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து , பொறியியல் கல்லூரியா, கலை அறிவியல் கல்லூரியா என்று காத்திருந்த நாட்கள் அது. திண்டுக்கல்லில் பெரிய அண்ணன் ஒருவர் , “தம்பி, நம்ம திருச்சி MLA -கிட்ட சொல்லி, பொறியியல் கல்லூரியில்  உனக்கு சீட் வாங்கிவிடலாம்”  என்றார். அவரைப் பார்க்க சில காலை நேரங்களில் காத்துக்கிடந்திருக்கிறேன்.  காலங்கள் பல கடந்து, NIC-யில் வேலை பார்க்கும்பொழுது , அதே பெரிய அண்ணனின் பெரிய…

  • அழகியை அறிய மூன்று நூல்கள்

    அழகியை அறிய மூன்று நூல்கள்

    சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள், வெள்ளைக்குடி நாகனார், கோவார் கிழார் முதல்,  ராஜ ராஜ சோழனின் கதையை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காட்சி வடிவமாக்கிய மணி ரத்னத்தின் படத்திற்கு பாட்டு எழுதிய கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வரை அவளைப் பற்றிப் பாடுவதும் எழுதுவதும் தொடர்கிறது. அவள் சரித்திரத்தைப் பாடுவது என்பது தமிழர்களின் வரலாற்றைப் பாடுவது. அவளின் கதையை எழுதினால், அது தமிழர்களின்…

  • நானெனும் நீயும் நீயெனும் நானும்

    நானெனும் நீயும் நீயெனும் நானும்

    கமலதேவியின் சீதா, துறையூரில் இறங்கி , பனிக்காலம் முடித்த புதுவெயிலில் கொடுத்த எரிச்சலில் கைக்குட்டையையெடுத்து முகத்தைத் துடைக்க, கதையின் உள்சென்றுவிட்ட வாசகன் சௌந்தர் உளப்பூர்வமாக சீதாவைத் தொடர, யாரோ தன் முன்னர் நிற்பதுபோல் மாயையெனத் தோன்ற நிமிர்ந்து பார்த்தார். கடுகைப்போட்டால் வெடிக்கும் என்ற முகத்துடன் கொதி நிலையில், மேலாளர் சௌந்தர் நின்றார்.  வா. சௌந்தர் : என்னங்க சார் ? மே. சௌந்தர் : எத்தனை நாளைக்குத்தான் கமலதேவி கதைகளையே…

  • வாழ்வெனும் நெய்யில் புரட்டிய வண்டல்

    வாழ்வெனும் நெய்யில் புரட்டிய வண்டல்

    “ஏம்மா,  இப்பல்லாம், நெய் காய்ச்சுனா முருங்கை இலையே போடறதில்ல” என்றேன் ராதாவிடம். “இந்தக் கோபி முருங்கைக் கீரை கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தார், எப்ப பார்த்தாலும் முருங்கை முருங்கைனு பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு.  ஒண்ணு பண்ணுங்க, உங்க தங்கச்சி சித்ராவ டிக்கட் போட்டுக் கூட்டிக்கிட்டு வாங்க. தம்பி கோபிய வாரா வாரம் முருங்கைக் கீரை, காய்னு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. அவங்களாச்சு, நீங்களாச்சு. நானே சமைச்சு சாப்பிட்டு எனக்கும் நாக்குச்…

  • தங்கையின் கைப்பக்குவம்

    தங்கையின் கைப்பக்குவம்

    ஞாயிற்றுக்கிழமை காலை.  இளையராஜா இசை வீடு முழுக்க காற்றென நிறைந்தது.  whatsapp-ல் ஒரு அழைப்பு.  “என்னக்கா, பண்ணிக்கிட்டிருக்கீங்க… “ சித்ரா “முருங்கைக் கீரையை, யூஸ்வலா, இந்தியன் ஸ்டோர்ல வாங்குவோம். முத்தன இலையா இருக்கும். இது சான் ஆண்ட்னியோ ஃப்ரெண்ட் கோபி, அவரு வீட்டுத் தோட்டத்திலிருந்து கொடுத்தது. கொழுந்து இலையா நல்லா இருக்கு . ஒவ்வொண்ணா பிய்க்கறதுக்குத்தான் கடியா இருக்கு…  “ ராதா “ஒவ்வொண்ணா எவ்ளொ நேரம் அக்கா பிய்க்கிறது. அப்படியே…

  • பொய் சத்தியம் செய்தவளே, நீ வரவில்லை

    பொய் சத்தியம் செய்தவளே, நீ வரவில்லை

    அவனை நேர்முகம் செய்வதற்காக நானும் உடன் வேலை பார்க்கும் நண்பர்களும் நீண்ட மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்தோம். டக் இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கண்ணாடிக் கதவை திறந்து வந்த அவனுக்கு கல்லூரியில் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருக்காது என்பது போன்ற முகம். அவனது விண்ணப்பத்தில் இதுவரை வேலை பார்த்த விபரங்களுடன் மதிப்பெண் விபரங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவன் வேலைக்குப் புதியவன் என்று ஏற்கனவே அனுமானித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் அனுபவம்…

  • கண்ணீரின் ஊற்றுக்கள்

    கண்ணீரின் ஊற்றுக்கள்

    சின்ன அக்காவின் காலில் சிறிதாக ஒரு கொப்புளம் முளைத்திருந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கும் குறும்புச் சிறுவனாக நான், “நம்ம தாத்தாவுக்கு இப்படித்தான் கொப்புளம் வந்தது, அப்படியே பெரிதாகி, பெரிதாகி செத்துப்போய்ட்டார்” என்றேன்.  விளையாட்டுப் பேச்சு விபரீதமாகி சண்டையில் முடிந்தது. மூன்று பர்லாங்க் தண்ணீர் சுமக்கும் அக்காவுடன் நானும் உடன் சென்று குடம் சுமந்து தாஜா செய்தாலும், உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் என்னிடம் பாரா முகமாகவே இருந்தார்.  பள்ளியில்…