-

அறிவுக் கொடை கொடுத்த நாயகிக்கு அஞ்சலி
ரீபா தொடரில் ரீபா, டாலி மேஜர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம், வேலை பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார். இரண்டு நாட்களில் அவருடனான நேர்முகம் இருக்க, டாலி மேஜர்ஸ் ரீபா-வின் வீட்டிற்கு நேரிலேயே வந்துவிடுவார். அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வுருபவர் டாலி பார்டன். தன் வீட்டில் தனது கனவு நாயகியை பார்த்த ரீபாவிற்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அந்த ரீபாவின் உணர்வுடனும் படபடப்புடனும் தான், டாலி பார்டனுடன் பாடும்…
-

இலக்கிய வாசகனின் தொடர் கவனத்தில் இருக்கவேண்டிய இலக்கிய விழா
நான்கு தென்னிந்திய மொழிகளின் படைப்புகளையும் படைப்பாளுமைகளையும் கொண்டாடவும் சிறப்பிக்கவும் பெங்களூரில் 2024 ஆகஸ்ட் 9,10, 11, தேதிகளில் Book Brahma Literature Festival முதன் முதலாக நடந்தேறியது. ஆரம்பமே அட்டகாசம் எனும் வகையில், அந்த விழாவிற்கே உரித்தான தனித்தன்மையால் இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்தது. விழா முடிந்து அழைக்கப்பட்டவர்கள் மகிழ்வாகவும், அழைக்கப்படாதவர்கள் ஏக்கமாகவும், விழாவை ஒருங்கமைத்த சதீஸ் சபாரிகே ஆளுமை குறித்தும் உலகெங்கும் ஒரே பேச்சு. அப்படித்தான் அயல் நாட்டில் வாழ்பவனான…
-

Snake-Eater – ஓர் அலசல்
உள்ளத்தால் ஒடுங்கிவிட்ட, வெளியாருடன் பேசத் தயங்கும், எந்த நேரமும் அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்படும் என்னை அப்படியே பிரதிபலிக்கிறாள் இந்த நாவலின் கதாநாயகி செலீனா, என்று T.Kingfisher-ன் Snake-Eater நாவல் குறித்து அதிமிகு புனைவுகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர் பாராட்டிப் பேசினார். Kingfisher நாவலை ஒன்று விடாமல் வாசிக்கும் வாசகர் என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று என்னால் அவரது கூற்றை ஒதுக்கிவிடமுடியவில்லை. நல்ல வாசகர் அவர். அதிமிகு புனைவுகள்…
-

தலைவர் தம்பி தலைமையில் – வழமையிலிருந்து விலகிய படம்
தமிழின் முதல் நாவலான, மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில், கதாநாயகன் பிரதாப முதலிக்கும் அவரது மாமன் பெண் ஞானம்பாளுக்கும் நிச்சயக்கப்படவிருக்கும் திருமணம், ஞானம்பாளின் அப்பா, மாப்பிள்ளை திருமணத்திற்குப் பிறகு பெண்வீட்டில்தான் தங்கவேண்டும் என்று சொல்ல, திருமணம் நின்று விடும். பிறகு பிரதாப முதலியாரின் தகப்பனாரும், ஞானம்பால் தகப்பனாரும் ஆணவத்தினால் வெவ்வேறு இடத்தில் சம்பந்தம் பேசி ஒரே நாளில், பூங்காவூர் என்ற ஊரில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வீட்டில்…
-

தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு
ஒரு மகன் வெளியூர் சென்று சம்பாதிக்கவேண்டும் என தன் தாயிடம் மன்றாடுகிறான். தாயிற்கோ மகனைப் பிரிய இஷ்டம் இல்லை. சென்றே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகனுக்கு கட்டுச்சாதம் கட்டி அனுப்பி வைக்கும்பொழுது, தாய், “போகும் வழியில் புளியமரத்தின் அடியில் சாப்பிட்டு ஓய்விடு, ஊருக்குத் திரும்பி வரும் வழியில் வேப்பம் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறு” என்கிறாள். அன்னையின் ஆணைப்படி, செல்லும் வழியில் புளியம் மரங்களை கண்டு ஓய்வு எடுக்கிறான்.…
-

நீர்வழிப் படூஉம் – என் வாழ்வனுபவம்
ஒரு நல்ல நாவல் என்பது இது எல்லாவற்றிற்கும் ஆம், ஆம் என்று நீர்வழிப் படூஉம் நாவல் குறித்து நான் சொல்வேன். இந்த நாவலுக்கு நான் விமர்சனமோ வாசிப்பனுபவமோ எழுதப்போவதில்லை. ஏனெனில் நாவலில் வந்தவர்கள் அனைவரும் என்னுடன் பயணித்தவர்கள் அல்லவா? அவர்கள் குறித்த ரகசியத்தை உங்களிடம் எப்படி சொல்வேன் ? மானுடத்தின் மீதும் வாழ்வின் மீதும் பிரியம் கொள்ளச் செய்யும் நாவலை எழுதிய எழுத்தாளர் தேவிபாரதிக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
-

வாசிக்கவைக்கும் அப்பாக்கள்
சேட்பாட்டிடம் ஒரு கேள்வியை கேட்க, அது தன்னை ஜட்ஜ் பண்ணும் என்ற கவலையில்லை. நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. AI-ஐ தனது நண்பனென பாவிக்கும் , எல்லாமே அதற்குத் தெரியும் என்று நினைக்கும் நண்பர் ஒருவர், “Why do we celebrate Father’s Day ?” என்று கேட்டுக்கொண்டிருக்கலாம். எனக்கு நண்பன் எல்லாமே புத்தகம்தான். எனக்கான எண்ணற்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் புத்தகங்களில் ஒன்றான, ‘நாலு மூலை’ என்ற…
-

பண்பாட்டைக் கண்டடைதல் – ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூரிலும் அவினாயபுரத்திலும் நடக்கும் ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழியே துள்ளி வரும் காளையை அடக்க, ஜீன்ஸும் டீசர்ட்டும் அணிந்த இன்றைய இளைஞர்களில், எத்தனை சதவீதத்தினருக்கு, அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் முன்னோர்கள் மேல்சட்டை கூடப் போடாமல் நடுமுதுகில் வியர்வை ஆறென ஓட, காளையை அணைவார்கள் எனத் தெரியும்? காளையின் திமிலைப் பிடிக்க முயற்சி செய்து வழுக்கி விழும் இளைஞன் ஒருவனைப் பார்த்து, “காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறுபிறவியிலும் தொடமாட்டேன்” …
-

பாரதி ராஜா – அஞ்சலி
நான் முளைத்து மூன்று இலை விடாததற்கு முன்னரே, என்னைவிட வயதில் மூத்த சகோதர்களால் , நல்ல படத்திற்குப் பின்னால் இருப்பவர் இயக்குனர் என்பதை கற்றுக்கொண்டேன். திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனிடம் என்ன சிறப்பு, பாலச்சந்திரனின் கதாநாயகி செருப்பைக் கழட்டிக்கொண்டே வசனம் பேசுகிறாள், ஶ்ரீதர் படம், என்று வீட்டு முற்றத்தின் நிலா வெளிச்சத்திலும், பள்ளி சென்று வீடு திரும்பும் நடைபாதையிலும், பாலபாடம் எடுத்தார்கள். பெல்பாட்டம் பேண்ட் போட்ட ஒரே…
-

பண்பாட்டைக் கண்டடைதல்
நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்ந்த தருணம் அதுதான். வேலை பார்க்கும் அலுவகலத்திலேயே, ஒரே வேலையை பல வருடமாக செய்து சலித்துப்போய், இன்னொரு துறைக்கு மாற்றிக்கொண்டு சென்றிருந்தேன். புதிய குழுவில் அறிமுகமான நண்பர் சேடிடம், சம்பிரதாயமான குடும்பம் குடித்தனம் கேள்விகள் வந்த பொழுது, அவருக்கு ஒன்பது குழந்தைகள் என்றார். எட்டுப் பெண்கள் ஒரு பையன். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்,” என்ற கேள்விக்கு, ஒரே பையன் என்று சொன்னால் சாதனையாளனாக இருக்காது.…