-

புனைவின் நடை வாசிப்பிற்கு ஒரு தடையா?
அசோகமித்திரனால் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ‘மலை மேல் நெருப்பு’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். அசோகமித்திரனின் பெயர் இருந்ததால் மட்டுமே முழு நாவலையும் வாசித்தேன். வாசிப்பின் பெரும் தடையாக இருந்தது நடை. மென்மையான மொழியில் கதை நெய்யும் அசோகமித்திரனின் நடையை நாவலில் காணோம். காதருகே வந்து கிசுகிசுப்பாக கதை சொல்லும் அவர் குரலை இனம் காண முடியவில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் நூல்களுக்கே உள்ள ஒரு பொதுவான…
-

சமகாலப் பிரச்சனையை விவாதிக்கும் ஓர் ஆய்வு நூல்
நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் பாவக்கதைகள் படத்தைப் பார்த்துவிட்டு, இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா, இதைப் போன்ற ஆணவக்கொலைகள் இன்றும் நடக்கின்றனவா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே சினிமாப் பார்க்கும் வசதி உள்ள இந்த நாளில், என்றாவது ஒரு நாள் செய்தியாக வரும் விஷயங்களை, என்னமோ அன்றாடும் நடக்கும் விஷயம்போல் படம் எடுத்திருப்பது, தவறான செய்தியைப் பரப்பவது போல் ஆகிறது என்று எழுதப்படும் விமர்சனங்கள். இவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக, சினிமாவை அரசியல்…
-

பரியேறும் பெருமாள் – நின்றாடும் நிஜம்
(மீள் பதிவு) மாரி செல்வராஜை , தொலைபேசியில் கூப்பிட்டு , “நான் நேற்று , பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன். எப்படி தம்பி, இப்படி ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்தீர்கள்? எல்லா பாத்திரங்களையும் எப்படி உங்களால் பார்வையாளனின் மனதிற்குள் திணிக்கமுடிந்தது?” என்று கேட்கலாம் என இருந்தேன். எனக்கு அவரை நேரடியாகத் தெரியாது என்பதால், எனக்குத் தெரிந்து திரைத்துறையில் வேலை செய்யும் நண்பன் லிவிக்கு போன் செய்து , “தம்பி, நீ…
-

தந்தைகள் ஆமாம் தந்தைகள்
நீச்சல் தெரியாதவனை குதியெனச் சொல்லிவிட்டு மூழ்கி மூழ்கி மொத்தமாக மேலே போகும் முன் மூன்று முறை மேல்வருவாய் காப்பாற்றிவிடுவேன் என கடும் நீச்சல் கற்றுக்கொடுக்க படியிறங்கி வரும் என் அய்யா ! எக்கணமும் சிக்கனம் தேவை நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு நல்லது கெட்டதென்றால் நாம துணை நிக்கனுமென வழிநடத்துன அய்யாவின் நேரடித் தம்பி, சின்னய்யா ! யாருக்கு எங்க பொண்ணு பிறந்திருக்கும் இந்தப் பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையென காலமெல்லாம் யோசிச்சு எனக்கும்…
-

வாசிப்பு வைத்தியன்
முதல் நாள் அந்த நிறுவனத்திலிருந்து நிதிப்பற்றாக்குறையால் வெளியில் அனுப்பப்பட்ட ஏழாயிரம் அலுவலர்களில் அவரும் ஒருவராக இருக்கலாம். மறு நாள் காலையில் அவர் பார்க்கும் தொலைக்காட்சியில் இருபது வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் டாலர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது உங்கள் கையில் நூறாயிரம் டாலர்கள் இருக்கும் என்று தொலைக்காட்சியில் ஒருவர், மேலே மேலே செல்லும் நிறுவனத்தின் பங்குகளின் விலையை படம் போட்டுக் காட்டினால் எப்படி இருக்கும் ? நடப்பதே அவரது…
-

கொட்டுக்காளி – யாவரும் பார்க்கலாம்
விஜய் ரெங்கராஜன் எழுதிய வெறியாட்டுக் கதையில், கதை சொல்லி ஷண்முகம், தமிழாசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப்படி சொல்கிறான். //வேலன் வெறியாட்டு சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சடங்கு முறை. தன் பெண் மெலிந்துகொண்டிருக்கிறாள் எனக் கண்டு, யாரோ ஒருவன் மீது காதல்கொண்டிருக்கலாம் என்று எண்ணி, அத்தலைவனின் நினைவை அவளிடமிருந்து அகற்றுவதற்காக செய்யும் சடங்காகும். // செயற்கை நுண்ணறிவு வந்து தன் வேலையே பறிபோகும் என பதறிக்கொண்டிருக்கும் ஒருவன், இந்த சங்ககாலச்…
-

யமுனை ஆற்றிலே
(மறு ஆக்கம்) மும்பை மாமாவின் போனிற்காகக் காத்திருந்தேன். ஏன் எல்லோரும் அந்த மாமாவைப்போல் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர் ஒருவரிடமிருந்துதான், இந்த இரண்டு நாட்களாக அம்மாவிடமிருந்து திட்டுகளாக வாங்கிக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்ற முடியும். பத்தாம் வகுப்பில் , 500-க்கு 175 வாங்கிய என் அம்மா, எனது 375-ஐத் தாங்கமுடியாமல் அங்கலாயப்பட்டாள். குடியே முழுகிவிட்டதுபோல், ஒப்பாரி வைத்தாள். எனக்குப் பிடித்தப் பாட்டை அவள் காதுபடப் பாடினால், இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று கூப்பாடு…
-

போடி லூசு
(மறு பிரசுரம்) அன்று அம்மா தினம். அம்மாவிற்கு, நான் அம்மாதின வாழ்த்தோ, ஒரு சின்னப் பரிசோ கொடுக்காதது பற்றிச் செல்லக் கோபம். எனக்கோ அம்மாவின் மீது கோபம். அம்மாவிற்குத்தெரியும், எனது கோபத்திற்குக் காரணம், மாலதிக்கு அவள் அம்மாதின வாழ்த்துச் சொல்லவில்லை என்பதுதான். எனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த மாலதி என்னும் ஆசிரியரை அழைத்து, அம்மாதினத்தன்று கூப்பிட்டு, ” அம்மாதின வாழ்த்துக்கள்” சொன்னால், “போடி லூசு” என்றாள். “நீ என்றைக்கு மாலதியைக் கூப்பிட்டு…
-

சசிகுமார் – அன்றாடத்தின் நாயகன்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் , எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள், டாலஸ் தமிழ் சங்கவிழாவில் நடிகர் சசிகுமார் அவர்களை எனக்கும் ராதாவிற்கும் அறிமுகப்படுத்தினார். சசிகுமார் அவர்கள் ஜேம்ஸ் வசந்த், சரியான தமிழ் வார்த்தைகளை யூகிக்கும் வினாடி வினா ஒன்றை குழந்தைகளுக்காக நடத்தினார். சசிகுமார் அவர்களும் ஒரு பள்ளிச் சிறுவனைப் போல யூகித்து வடமும் இடமுமாக அமர்ந்திருந்த எங்களிடம் பகிர்ந்து சரியாக இருந்தால் புன்முறுவல் புரிந்தார். பவா, அவரது கதையாடலின்போது, தங்கள்…
-

வீர தீர சூரன் – பார்க்கவும் ரசிக்கவும்
மணி ரத்னத்தின் இயக்கத்தில் வரும் எல்லா படமும், வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளிவருகின்ற எல்லா படமும் என்று பார்ப்பவன் நான். அந்த வரிசையில் விக்ரம் நடித்த படம் என்றாலும் பார்ப்பவன். அப்படித்தான் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், SJ சூர்யா, நடிப்பில், தேனி ஈஸ்வரன் ஒளியமைப்பில், GV பிரகாஷ் குமார் இசையமைப்பில், வெளிவந்துள்ள “வீர தீர சூரன்” சினிமா-வை அமேசான் பிரைமில் பார்த்தேன். படம் விறுவிறுப்பாக…